நவம்பர் 21 - உலக மீனவர் தினம்.
கவிதை - மு.மகேந்திர பாபு.
கடற்கரைக்கு வாரிங்க
பொழுதைப் போக்க !
கடலுக்குள்ள போறோம்ங்க
பொழப்பப் பாக்க !
காலாற நடக்கவும் ,
காத்து வாங்கவும் வாரீங்க !
கால் வயிற்றுப் பாட்டுக்காக
கடலுக்குள்ள போறோம்ங்க !
கடல் அன்னை உடல் மேல
துடுப்பு போடுறோம் !
கவலைகள் தீரந்திடத்தான்
ஏலோலோ பாடுறோம் !
அலை மேல வலை வீசி
மீனைத்தான் தேடுறோம் !
விலை வந்து சேர்ந்திடவே
மகிழ்ச்சியில கூடுறோம் !
வானிலை நல்லாருந்தால்
வாழ்க்கை நிலை நல்லாருக்கும் !
மேகமூட்டம் வந்ததுனா
சோகமூட்டம் முள்ளாருக்கும் !
இன்னல் தீர்க்கப் போகையிலே
மின்னல் வந்து வெட்டுதையா !
இடிஇடிச்சு வானத்தில
ஏகமாய் மழை கொட்டுதையா !
காத்தும் மழையும் கணக்கின்றி
கடலுக்குள்ள சுத்துதையா !
நேத்தும் இன்றும் உணவின்றி
குடல் பசியால கத்துதையா !
கலங்கரை விளக்கால
படகோட கரை வந்தோம் !
கலங்காத மனம் கொண்டு
கைநிறைய காசு தந்தோம் !
காத்திருந்த பெண்டு பிள்ள
கட்டிப்பிடிச்சு கண்ணீர் விடும் !
கடலோடி எங்களுக்கு
நெய்தல்தான் நெஞ்சத் தொடும் !
கொண்டு வந்து போட்ட மீனு
கரையிலதான் துள்ளுது !
காத்திருந்த சாதிசனம்
கைநிறைய அள்ளுது !
கைகொடுத்த கடல்தாயை
கரம்குவித்து கும்பிடுவோம் !
நாளைப் பொழுதும் நல்லதென
நாங்களும் நம்பிடுவோம் !
கடற்கரைக்கு வாரிங்க
பொழுதைப் போக்க !
கடலுக்குள்ள போறோம்ங்க
பொழப்பப் பாக்க !
கவியாக்கம் - பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
2 Comments
Super👌👌👌
ReplyDeleteExcellent 👍👏👏👏
Thank you Sir🙏🙏🙏🙏
சிறப்பு,அருமை மீனவநண்பனாய் துயர் கண்டு துயரங்கொள்ளும் தொலைநோக்கு பார்வை அருமை.துன்பம் உணரும் வரிகள் சிறப்பு.வாழ்த்துகள்.👌👌🙏🙏🙏💐💐
ReplyDelete