வகுப்பறை

வகுப்பறை

புதிய புத்தகம் மணக்கிறது.
ஒவ்வொருநாளும் 
என்னைப் புரட்டிக்கொண்டிருந்தால்
உன் எதிர்கால வாழ்க்கையும் மணக்கும்
என்பதைச் சொல்லாமல் சொல்லி !

#  கரும்பலகையில் 
நிறைந்து கிடக்கும் 
வார்த்தைகளில்தான்
மறைந்து கிடக்கின்றது
மாணவர்களின்  வாழ்க்கை.

# ஆசிரியர்களையும் ,
மருத்துவர்களையும் ,
பொறியாளர்களையும் இன்னபிற
பணியாளர்களையும் பிரசவித்த வகுப்பறை
முதன்முதலாய் மகிழ்ந்தது
நல்ல மனிதனை பிரசவித்தபோது !

# ஒவ்வொரு 
வகுப்பறையாய்த் தேடியும்
மாணவர்களின் 
குரல்களைக் கேட்க முடியாமல்
மயங்கி விழுந்தது
மே மாத விடுமுறையில் காற்று !

#  பால்யத்தில் பைக்கூடு
சுமந்த தோள்களில் 
மகிழ்ச்சியோடு பயணிக்கிறது
குடும்பத்தின் சுமை .

#  பள்ளிக்கூடம் வந்தவுடன்
செடிகளிடம் பேசும்
மாணவர்களிடம்  பூத்துக்கிடக்கிறது
மனமும் , வனமும்.

மு.மகேந்திர பாபு ஆசிரியர் ,

Post a Comment

1 Comments

  1. ஐயா இந்தக்கவிதையானது அருமையாக இருக்கிறது ஐயா

    ReplyDelete