தொழிலே துணை / கவிதை - தன்சியா - பைந்தழிழ் / tamilkavithai - greentamil.in

 

தொழிலே துணை


ஞாயிறு இரவு,

ஊர் சுற்றும் 

வாலிப மகனுக்கும் 🤷🏻

பேறுகாலத்திற்காய் வந்த 

கர்ப்பிணி மகளுக்கும்🤰

உயிராய் எண்ணும் கணவருக்கும்👩‍❤️‍👨

 

ஊர் கண்ணு 👁️

உறவு கண்ணு👁️

கொல்லிக் கண்ணு 👁️

பேய்க் கண்ணு 👀

பிசாசுக் கண்ணு 👀

எல்லாக் கண்ணும்👁️👁️ ஓடிப்போக முச்சந்தியில் வெட்டி எறியப்பட்டன எலுமிச்சைகளும் 🍋🍋

பூசணிகளும்....🍈🍋‍🟩

திரும்பிப் பார்க்காமல்

மிதித்து விடாமல் பக்குவமாய் அடியெடுத்து வீடு திரும்பினாள் அம்மா...



திங்கள் காலை 

காவு கொடுக்கப்பட்ட கனிகளை பத்தோடு ஒன்றாக எடுத்து முச்சந்தியின் சாபம் போக்கினாள் 

தூய்மைப் பணியாளர் தேவதை🧚🏻‍♀️🧚🏻‍♀️


பேய்க் கண்ணு 

பிசாசுக் கண்ணு 

எந்தக் கண்ணும் அருகில் நெருங்காது அவளிடம் ,

அவளுக்கு 

 *தொழிலே துணை* 


  ம.தன்சியா

முதுகலைத் தமிழ் ஆசிரியர் 

 நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொள்ளாச்சி

Post a Comment

0 Comments