நிறைவு- கவிதை

 



நிறைவு


குழந்தைகளின் சந்தோசத்தில் 

குதூகலமாகிவிடுகிறான்.

கைக்கடிகாரமும் , 

கைச்செயினும்,

சங்கிலியும்

கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து , 

குழந்தைகளுக்கு அணிவித்து

அழகு பார்க்கையில்

நிறைகிறது ஜவ்வு மிட்டாய்க்காரனின் மனமும் பணப்பையும்.


மு.மகேந்திர பாபு, 

 கருப்பாயூரணி , மதுரை.20

செல் - 97861 41410.

Post a Comment

0 Comments