கம்பன் கண்ட பெண்கள் - இராமாயண கதை மாந்தர்கள் / KAMPA RAMAYANAM - KAMPAN KANDA PENKAL - KAVITHAI

 

*கம்பன் கண்ட பெண்கள்* 



கோதண்ட ராமனை

 ஈன்ற *கோசலை* 


 அகிலம் போற்றும் அடியவனாம்

 லக்குவனனைத் தந்த *சுமத்திரை* 


 அன்பின் உருவாய் உருப்பெற்று

 கூனியின் சொற்    

 சிறையில் சிக்கிச்

 சிந்தை இழந்த *கைகேயி!* 


 சினம் தணிக்க

 தகுதருணம்

காத்தவளாய்

 கதைத்தொடர்ச்சிக்கு

 ஏற்ற காரிகையாய்

 *கூனி!* 


 அகலிகை மோட்சம் பெற 

சீதையெனும் செல்வி திருமதியாக

 ராமன் சீதாராமனாக

 காப்பியத்தின் போக்கை கனித்துவமாக்க

 அரக்கியாக

 *தாடகை!*


 பொறுமையின் திருவுருவாய் மணாளனையே மதியில் நிறுத்தியவளாய்

கனலையே கற்பினால் பொசுக்கியவளாய்

 *சீதை!* 


உற்றானின்

 பிரிவைஏற்காது

 உறக்கத்தை

 வரமாய்ப் பெற்றவளாய்

 *ஊர்மிளை!* 


கல்வியைக் கண்ணாய்க் கருதி

 நற்குருவை அடைந்து

 ராமனைக் கண்டு பிறவிப் பயன் அடைபவளாய் 

 *சபரி!* 


வானரக் குல 

மகர ஜோதியாய்

 மதிநுட்பத்தவளாய்

பார் போற்றும் 

 *தாரை!* 


கம்பனின் மெல்லினத் தமிழுக்கு உவமையானவளாய் *சூர்ப்பனகை!* 


பத்து தலையனின் பத்தினி

 அரக்கர் குலத்தில் பிறந்து 

அற்புதம் குணம் கொண்ட *மண்டோதரி!* 


உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவளாய் அகவைக்கு மிஞ்சிய அறிவுத்திறம் கொண்டவளாய் *திரிசடை!*



  ம.தன்சியா,

 தமிழாசிரியர்,

நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி

Post a Comment

0 Comments