கள்ளிப்பழக் கண்ணால ..

 


கள்ளிப்பழக் கண்ணால ...

கள்ளிப் பழக் கண்ணால காதலிச்சவளே
என்னைக் காதலிச்சவளே !
ஓன் கண்ணு ரெண்டும் உருளும் போது
உசுரு சுத்துதடி ஏன் உசுரு சுத்துதடி

நீ நடக்கும் போது தரையும் தாளம் போடுது
நீ சிரிக்கும் போது காற்றும் கவிதை பாடுது
உச்சி முதல் பாதம் வரை உன்னழகுல - அந்த
வானவில்லும் மதிமயங்கி மறைந்து போகுது !

பட்டமரம் துளிர்த்ததடி  பார்வை பட்டுத்தான்
உன் பார்வை பட்டுத்தான்
பாத்த உடன் பருவம் கிளரும் பருவச் சிட்டுத்தான்
நீ பருவச் சிட்டுத்தான்

உன் கைவிரல்கள் பட்டதால பூவும் மணக்குது
காகிதப் பூவும் மணக்குது
நம் காதல் சொல்லி கூழாங்கல்லும் வெய்யில் காயுது
தண்ணி பட்டவுடன் தாளம் போட்டு உருண்டு போகுது

நீ வெட்கிச் சிவக்கும் அழகைக் கொஞ்சம்
கடன் வாங்குச்சோ - மருதாணி கடன் வாங்குச்சோ
மதுரை வீரன் சிலையும் இப்போ  புன்னகைக்குது
உன் முகத்தைப் பாக்கும் போதிலே ...

மின்னல் வந்து வெட்கிப் போனது கண்சிமிட்டலிலே
உன் கண் சிமிட்டலிலே
மழை மேகம் வந்து தங்கிப் போனது கூந்தலிலே
உன் கூந்தலிலே ...

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments