மரங்களும் மாணவர்களும்

 


மரங்களும் , மாணவர்களும் ...



வணக்கம்யா.உள்ளே வரலாமா ?


வணக்கம்பா.வரலாமே !


அய்யா , எங்க ரெண்டுபேரையும் பசுமைப்படைல சேத்துக்கோங்கயா.


எந்த வகுப்பு ? 


எட்டாப்பு.இ பிரிவுங்கயா.


உங்க வகுப்பிலிருந்து ஏற்கனவே நாலு பசங்கள சேத்தாச்சே.ஒருத்தர் மட்டும சேந்துக்கிரலாம்.


அப்டினா இவன சேத்துக்கோங்கயா.

இல்லங்கயா.இவன சேத்துக்கோங்க.இவன்தான் ரொம்ப ஆர்வமா இருக்கான்.


இல்லங்கயா.இவன்தான் உங்ககிட்ட என்னயக் கூட்டிட்டு வந்தான்.இவன சேத்துக்கோங்க.நான் அடுத்த வருசம் சேந்துக்கிறேன்.


இரண்டு பேரையும் சேத்தாச்சு.மகிழ்ச்சியா ?


ரொம்ப நன்றிங்கயா. எங்களுக்கு எந்த மரக்கன்றுங்கயா ?


ஆசிரியர் தினத்திற்காக நாளை ஒரு மரக்கன்று நடுறோம்.அது உங்களுக்குத்தான்.


நல்லா வளத்து , பெரிசாக்கிட்டா பரிசு தருவிங்களாமே அப்டிங்களா அய்யா ?


ஆமா. அந்த மரம் உங்களது பொறுப்பு. நீங்க நல்லா வளத்திட்டிங்கனா உங்களுக்கு இறைவழிபாட்டுக் கூட்டத்தில வச்சு பரிசு வழங்கப்படும்.


மரத்திற்கு பேரு வைப்பீங்களாமே ?


ஆமா.என்ன பேரு வைக்கலாம்டா ? 


எங்க மரத்திக்கு டாக்டர் . அப்துல்கலாம் அய்யா பேர வைக்கிறோம்யா.


ரொம்ப சந்தோசம் டா. 


வளரும் தலைமுறை , பல தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக இருக்க மரக்கன்றுகளோடு இந்த நாளைத் தொடங்குவோம்.


மு.மகேந்திர பாபு.


தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்.

Post a Comment

0 Comments