சுமை
ஈரச் சாக்கினுள்
முழுவதும் நிரப்பப்பட்டு,
மூட்டப்பட்ட
கத்தரிக்காய் மூடையை
தலையில் வைத்து
ஏணியில் ஏறி
பேருந்தின் மேல் போட்டுவிட்டு
அசராமல் இறங்கிவரும்
பெரியப்பா,
பின்னொரு நாளில்
மதுரை வந்தபோது
காலையிலும் , மாலையிலும்
நாயோடு நடைபயணம்
செய்பவர்களையும்,
சிறுஎடைகளைத் தூக்கிவர
ஆட்களைத் தேடுபவர்களையும் கண்டு
சிரித்துத்தான் போனார்
எழுபதை எட்டும் தன்
உடற்கட்டைக் கண்டு.
மு.மகேந்திர பாபு.
0 Comments