9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - உரைநடை - ஏறுதழுவுதல் - இயங்கலைத்தேர்வு - வினா & விடை / 9th TAMIL - EYAL - 3 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 3 , உரைநடை உலகம்

பண்பாடு - ஏறுதழுவுதல்

இயங்கலைத்தேர்வு - ONLINE TEST 

வினா & விடை - QUESTIN & ANSWER

வினா உருவாக்கம் 

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் ,மதுரை.

****************   **************   ***********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்   ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

***************     ****************    ************

1) வீரத்திற்கும் , விளைச்சலுக்கும்   செழிப்பிற்கும், செல்வத்திற்கும்   தமிழர்களால்   அடையாளப்படுத்தப்படுபவை --

அ) மாடுகள்

ஆ) ஆடுகள்

இ) நாய்கள்

ஈ) பூனைகள்

விடை : அ ) மாடுகள்

2) தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு -----

அ) கபடி

ஆ) குத்துச்சண்டை

இ) ஏறுதழுவுதல்

ஈ) வேட்டையாடுதல்


விடை : இ ) ஏறுதழுவுதல்

3) பண்பாட்டுத்தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது ------ வரலாறு.

அ) இந்தியர்

ஆ) பாண்டியர்

இ) சோழர்

ஈ) தமிழர்

விடை : ஈ ) தமிழர்

4) எழுந்தது துகள் , ஏற்றனர் மார்பு          கவிழ்ந்தன மருப்பு , கலங்கினர் பலர் என
ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கியமான ------  யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ) புறநானூறு

ஆ) முல்லைப்பாட்டு

இ) கலித்தொகை

ஈ) மதுரைக்காஞ்சி

விடை : இ ) கலித்தொகை

5 ) ஏறுதழுவுதல் பற்றிய செய்திகள் உள்ள நூல் -------

அ) கலித்தொகை

ஆ) சிலப்பதிகாரம்

இ) புறப்பொருள் வெண்பாமாலை

ஈ) மேலே உள்ள மூன்றும்

விடை : ஈ ) மேலே உள்ள மூன்றும்

6 ) எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை ------  பதிவு செய்துள்ளது.

அ ) முக்கூடற்பள்ளு

ஆ) கண்ணுடையம்மன் பள்ளு

இ) உலா

ஈ) பிள்ளைத்தமிழ்

விடை : ஆ ) கண்ணுடையம்மன் பள்ளு

7) சேலம் மாவட்டம் ------- எனும் ஊரில்
எருது பொருதார் கல் உள்ளது.

அ) வாழப்பாடி

ஆ) அயோத்தியாப்பட்டினம்

இ) கருவந்துறை

ஈ) அருநூத்துமலை

விடை : இ ) கருவந்துறை

8) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி
அருகே -------  ல் எருதுகளை பலர் விரட்டும்
ஓவியம் காணப்படுகிறது.

அ) கரிக்கையூர்

ஆ) மசினகுடி

இ) ஊட்டி

ஈ) தொட்டபெட்டா

விடை : அ ) கரிக்கையூர்


9) ------   நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப்பங்கு வகிக்கிறது.

அ) சிந்து சமவெளி

ஆ) வைகை நதி

இ) ஹரப்பா மொகஞ்சதாரோ

ஈ ) பொருணை

விடை : அ ) சிந்து சமவெளி

10 ) ஏறுதழுவுதல் நிலத்து ------  
மக்களின் அடையாளம்.

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

விடை : ஆ ) முல்லை

11) ஏறுதழுவுதல் நிலத்து
வேளாண்மக்களின் தொழில்
உற்பத்தியோடு பிணைந்தது.

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ ) மருதம்

ஈ) பாலை

விடை : இ ) மருதம்

12) ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் -------  என்று அழைக்கப்பட்டன.

அ ) ஏர் மாடுகள்

ஆ) எருதுகள்

இ) ஏறுகள்

ஈ) மேலே உள்ள மூன்றும்

விடை : ஈ ) மேலே உள்ள மூன்றும்

13 ) மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏறுபடுத்திய விழாவே -------

அ ) மாட்டுப்பொங்கல்

ஆ) காணும் பொங்கல்

இ) திருவள்ளுவர் திருநாள்

ஈ) போகிப்பண்டிகை

விடை : அ ) மாட்டுப்பொங்கல்

14 ) சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ---- ஐக் குறிக்கும்.

அ) கயறு

ஆ) வளையம்

இ) மணி

ஈ) மாலை

விடை : ஆ ) வளையம்

15 ) ஏறுதழுவுதல் -------  ஆண்டுகாலத்
தொன்மையுடையது.

அ) 500

ஆ) 1000

இ ) 1500

ஈ) 2000

விடை : ஈ ) 2000




Post a Comment

0 Comments