10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - அலகு 5 - பகுதி 4 - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - HISTORY - PART 4 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்  

வரலாறு - அலகு - 5

 19 ஆம் நூற்றாண்டில் சமூக , சமய

 சீர்திருத்த இயக்கங்கள் - பகுதி - 2

வினா உருவாக்கம் - 

திருமதி.ச.இராணி ப.ஆ,

இளமனூர் , மதுரை.

**************    ***************   **********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்   ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை

*****************    ***********   ************

1) நிரங்கரி என்றால் என்ன?

அ) வறுமை

ஆ) விடுதலை

இ) உருவமற்ற

ஈ) மறுமணம்

விடை :  இ) உருவமற்ற

2) நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர் யார்?

அ) பாபாதயாள் தாஸ்

ஆ) வள்ளலார்

இ) அயோத்திதாசர்

ஈ) பாபாராம்சிங்

விடை : அ) பாபாதயாள் தாஸ்

3) நாம்தாரி இயக்கத்தைத்   தோற்றுவித்தவர் யார் ?

அ) பாபா தயாள்தாஸ்

ஆ) பாபா ராம்சிங்

இ) அயோத்திதாசர்

ஈ) மௌலானா

விடை : ஆ) பாபா ராம்சிங்

4) சீக்கியர்களுக்கென உருவாக்கப்பட்ட கால்சா கல்லூரி எங்குள்ளது?

அ) வடலூர்

ஆ) டெல்லி

இ) சிதம்பரம்

ஈ) அமிர்தசரஸ்

விடை : ஈ) அமிர்தசரஸ்

5) வள்ளலார் என அறியப்பட்டவர் யார் ?

அ ) இராமலிங்க அடிகள்

ஆ) அயோத்திதாசர்

இ) தயானந்த சரஸ்வதி

ஈ) H.S.ஆல்காட்

விடை : அ ) இராமலிங்க அடிகள்

6) ' துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல்
நெஞ்சக்காரர்கள். அவர்களின்
ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்'
எனக்கூறியவர் யார் ?

அ) அயோத்திதாசர்

ஆ) வள்ளலார்

இ ) பாபா ராம்சிங்

ஈ) அயோத்திதாசர்

விடை : ஆ) வள்ளலார்

7) அனைத்து மக்களுக்குமான இலவச உணவகம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?

அ) தட்சிணேசுவரம்

ஆ) கல்கத்தா

இ) வடலூர்

ஈ) திருவனந்தபுரம்

விடை : இ) வடலூர்

8) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்னும் அமைப்பை நிறுவியவர் யார்?

அ) வள்ளலார்

ஆ) காந்தியடிகள்

இ) அய்யன்காளி

ஈ) நாராயணகுரு

விடை : அ) வள்ளலார்

9 ) சிங்கசபா என்னும் அமைப்பு
தோற்றுவிக்கப்பட்ட இடம் எது?

அ ) திருவனந்தபுரம்

ஆ) அமிர்தசரஸ்

இ) புனே

ஈ) மும்பை

விடை : ஆ) அமிர்தசரஸ்

10) ஒரு பைசாத்தமிழன் என்ற
பத்திரிக்கை யாரால் வெளியிடப்பட்டது?

அ) அயோத்திதாசர்

ஆ) வள்ளலார்

இ) அய்யன்காளி

ஈ) இராஜாராம் மோகன்ராய்

விடை : அ) அயோத்திதாசர்

11) திராவிட பாண்டியன்' என்னும் இதழ் யாரால் துவங்கப்பட்டது?

அ) அயோத்திதாசர்

ஆ) ராம்சிங்

இ) வள்ளலார்

ஈ) அய்யன்காளி

விடை : அ) அயோத்திதாசர்

12)  ----- , அகாலி இயக்கத்தின்முன்னோடி.

அ) சிங்சபா

ஆ) அலிகார்

இ) பார்சி

ஈ) பிரார்த்தனை சமாஜம்

விடை : அ) சிங்சபா

13 ) வள்ளலாரின் பாடல்கள் ------- பெயரில் தொகுக்கப்பட்டன.

அ) திருவாசகம்

ஆ) பத்துப்பாட்டு

இ) திருவருட்பா

ஈ) தேவாரம்

விடை :  இ) திருவருட்பா

14) அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவியவர் யார்?

அ) விவேகானந்தர்

ஆ) இராமகிருஷ்ணர்

இ) அயோத்திதாசர்

ஈ) அய்யன்காளி

விடை : இ) அயோத்திதாசர்

15 ) திராவிட மகாஜன சபையின்  முதல் மாநாடு நடத்தப்பட்ட இடம்

அ) பூனா

ஆ) நீலகிரி

இ) தேனி

ஈ) சென்னை

விடை : ஆ) நீலகிரி


Post a Comment

0 Comments