ஒப்படைப்பு
வகுப்பு:9
பாடம்: சமூக அறிவியல்(வரலாறு)
அலகு-2 பண்டைய நாகரிகங்கள்
பகுதி-அ
1.ஒரு மதிப்பெண் வினா
1 நைல் நதியின் நன்கொடையென அழைக்கப்படுவது.........
அ)சுமேரியா
ஆ) எகிப்து
இ) மெசபடொமியா
ஈ)பாபிலோன்
விடை : ஆ ) எகிப்து
2. எகிப்தியர்கள் இறந்த உடலைப்பதப்படுத்தி பாதுகாத்தமுறை
அ) சர்கோபகஸ்
ஆ ) ஹைக்சோஸ்
இ) மம்மியாக்கம்
ஈ)பலகடவுளர்களைவணங்குதல்
விடை : இ ) மம்மியாக்கம்
3. "கண்ணுக்குக்கண் " "பல்லுக்குப்பல் “என்ற சொற்றொடர் இதோடு தொடர்புடையது.
அ)சுமேரியர்களின் மருந்துவமுறை
ஆ) சீனர்களின் தத்துவம்
இ)எகிப்தியர்களின் எழுத்துமுறை
ஈ)ஹமுராபியின் சட்டத்தொகுப்பு
விடை : ஈ ) ஹம்ராபியின் சட்டத்தொகுப்பு
4.ஹரப்பாமக்கள் ........ பற்றி அறிந்திருக்கவில்லை
அ) தங்கம் மற்றும் யானை
ஆ)குதிரை மற்றும் இரும்பு
இ) ஆடு மற்றும் வெள்ளி
ஈ) எருது மற்றும் பிளாட்டினம்
விடை : ஆ ) குதிரை மற்றும் இரும்பு
5.சீனாவின்துயரம்எனஅழைக்கப்படுவது
அ) மஞ்சள் ஆறு ஆ) நைல்
இ) யூரப்ரடிஸ் ஈ) டைக்ரிஸ்
விடை : அ ) மஞ்சள் ஆறு
கோடிட்ட இடத்தைநிரப்புக
1. எகிப்து அரசர்..... என அழைக்கப்பட்டார்
விடை : பாரோ
2. எகிப்தியர்களின் எழுத்துமுறை.......
விடை : ஹைரோகிளிபிக்
3. சௌஅரசின் தலைமை ஆவணக்காப்பாளர்........ஆவார்
விடை : லா வோ ட் சு
4. மெசபடோமியா....... மற்றும் ....... நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.
விடை : யூப்ரடிஸ் , டைக்ரிஸ்
5. ஹரப்பாவின் மாடுகள்......... என்று அழைக்கப்பட்டன.
விடை : ஜெபு
பகுதி-ஆ
11. சிறுவினா
1. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.
* மதில் சுவர்களால் சூழப்பட்ட சுமேரிய நகரங்களின் மத்தியில் சிகுரட் எனப்படும் கோயில் இருக்கும்.
* கோயில் மத குருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
* வரியாக வசூலித்ததைச் சேமித்து வைக்கும் கிடங்காகக் கோயில்கள் பயன்பட்டன.
2.ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் விவரி.
* பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம்.
* " கண்ணுக்குக் கண் " , " பல்லுக்குப் பல் " என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
* 282 பிரிவுகள் உள்ளன.
3.சீனர்களின் எழுத்து முறை பற்றி கூறுக
* பண்டைய காலத்தில் ஒரு எழுத்து முறைய உருவாக்கினர்.
* முதலில் சித்திர எழுத்து முறையாக இருந்தது . பின்னர் குறியீட்டு முறையாக மாறியது.
4. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி பற்றி கூறுக.
பொ.ஆ.மு.1900 லிருந்து சிந்து வெளி நாகரீகம் வீழ்ச்சி பெறத்துவங்கியது. வணிகத்தில் வீழ்ச்சி , நதியின் வறட்சி அல்லது வெள்ளப் பெருக்கு , அந்நியர் படையெடுப்பு ஆகியவை இந்த நாகரீகம் வீழ்ச்சி பெற முக்கியக் காரணமாக அமைந்தன.
5.மம்மியாக்கம் என்றால் என்ன?
எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தினார்கள். இதற்கு மம்மியாக்கம் என்று பெயர்.
லாவோ ட்சு (பொ.ஆ.மு. 604 521)
சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாளராக இருந்தார். இவர்தான் (தாவோயிசத்தைத் தோற்றுவித்தார்.
ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று இவர் வாதிட்டார்.
(கன்பூசியஸ் (பொ.ஆ.மு. 551-497) ஒரு
புகழ்பெற்றசீனதத்துவஞானி.அவர் ஒரு அரசியல் சீர் திருத்தவாதி) ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால், அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச
வாழ்வு முறைப்படுத்தப்பட்டுவிடும்," என்று
குறிப்பிடுகிறார்.)
மென்சியஸ் (பொ.ஆ.மு. 372-289)
மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார்.)
1 Comments
9 th std வரலாறு ஒப்படைப்பு 2
ReplyDeleteOnline Test
https://tamilmoozi.blogspot.com/2021/09/9th-social-science-history-july.html?m=1