திறன்பேசி காதல்
இசைப்பாடல். - மு.மகேந்திர பாபு.
ஓடுறான் ஒதுங்குறான் ஒளியிறான்
ஒரு போனு வந்தா ...
ஓடுறான் ஒதுங்குறான் ஒளியிறான்
நாள் முழுதும் பாத்துக்கிட்டே
நட பிணமா அலையிறான்
அதப் பாத்துப் பாத்து கண்ணு ரொண்டும் பூத்துப் போச்சு !
கேட்டுக் கேட்டு காது ரெண்டும்
அவிஞ்சு போச்சு ! - ஆனாலும்
( ஓடுறான் ... )
உலகம் இப்ப உள்ளங்கையில் மாறிப் போச்சு
சட்டப் பையில் செல்போனு ஏறிக்கிச்சு
சந்தோசமும் வீட்ட விட்டு ஓடிப்போச்சு
சங்கடமும் வந்து வந்து கூடிப் போச்சு
சிறுசு முதல் பெருசு வர அடிமையாச்சு !
வாட்சாப்பும் பேஸ்புக்கும் போதை ஆச்சு !
சிரிச்சு சிரிச்சுப் பேசுறான் செல்லுக்குள்ள !
சிடுமூஞ்சியா இருக்குறான் வீட்டுக்குள்ள ! ( ஓடுறான் ... )
செல்லுக்குள்ள லட்சலட்சம் செய்தி இருக்கு !
போட்டித் தேர்வில் வென்றிடவே வேலை உனக்கு !
பொது அறிவு புது அறிவு விரிஞ்சு கெடக்கு !
பாடங்களைப் படித்திடவே இணையம் இருக்கு !
சாமி முதல் சமையல் வரை பாடம் இருக்கு !
பக்குவமா சொல்லித்தர ஆட்கள் இருக்கு !
வீட்டிலிருந்தே காசு பாக்க வழியும் இருக்கு !
தேடுவதைத் தந்திடவே கூகுள் இருக்கு ! ( ஓடுறான் ... )
போன் இல்லாம கொஞ்ச நேரம் இருக்க முடியல !
புத்தி கொஞ்சம் பாத மாறும் தடுக்க முடியல !
நல்ல விசயம் இருக்குதையா பார்ப்பதே இல்ல !
தடம் மாறும் வாழ்க்கைக்கு போனும் ஒரு தொல்ல !
தூங்கும் போதும் முழிக்கும் போதும் கையில செல்லு !
என்ன புத்தி இந்தப் புத்தி என்னனு சொல்லு !
செல்ல வச்சு சொல்லவச்சு நல்லது பண்ணு !
வீடும் நாடும் வாழ்த்திடுமே என் செல்லக் கண்ணு !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் .மதுரை - 97861 41410
0 Comments