ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 50 ( பொன் ஓவியப் பதிவு )
ஆடும் மயிலை அழகாய் வரைவோம் !
வழங்குபவர் : திருமதி.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை
************* ************** ************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இந்த நாள் இனிய நாள். ஆம் ! ஓவியம் வரையலாம் வாங்க ! எனத்தொடங்கி இன்றுடன் நாம் 50 - வது ஓவியத்தை நிறைவு செய்திருக்கின்றோம். நம்முடைய ஆஸ்தான ஓவியர் திருமதி.இலட்சுமி ப்ரதிபா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்பார் வான்புகழ் வள்ளுவப் பேராசான். அவரின் கூற்றுக்கிணங்க எடுத்த செயலை மிகத் திறம்பட செய்து கொண்டிருக்கிறார் நம் ஓவியர்.
வண்ணத்துப் பூச்சியில் தொடங்கி , பல பறவைகள் , விலங்குகள் , வாகணங்கள் என வண்ணம் பல குழைத்து இன்று அழகு மயிலுன் நடனத்தை ஐம்பதாவது பதிவாகக் கண்டு கொண்டிருக்கின்றோம்.
மயிலின் நடனமும் , குயிலின் பாடலும் நம் உள்ளத்திற்கு மகிழ்வைத் தரும். அப்படிப்பட்ட அழகிய மயிலை வரைவோமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
என்னோட நடனம் பிடிச்சிருக்கா குட்டீஸ் ?
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments