பத்தாம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு - 3 , வினாக்களும் விடைகளும் - இயல் 3 பண்பாடு - 10th TAMIL - ASSIGNMENT 3 - EYAL 3 - QUESTION & ANSWER

 


              ஒப்படைப்பு  - விடைகள் 

                       வகுப்பு - 10

                      பாடம்:தமிழ்

              இயல் - 3  பண்பாடு

                        பகுதி - அ

1.ஒரு மதிப்பெண்வினாக்கள்

1. விருந்தொடு உண்- இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு எது?

அ) ஐ

ஆ) இன்

இ) ஒடு

ஈ) ஆல்

விடை : இ ) ஒடு 

2. உபசரித்தல் என்பதற்கான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ) உணவிடுதல்

ஆ) உரையாடுதல்

ஆ) தங்கவைத்தல்

ஈ) விருந்தோம்பல்

விடை : ஈ ) விருந்தோம்பல்

3. உயர்பண்பு என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க

அ) பண்புத் தொகை 

ஆ) வினைத்தொகை

இ) வேற்றுமைத்தொகை 

ஈ) அன்மொழித்தொகை

விடை : ஆ) வினைத்தொகை 

4. விருந்தே புதுமை எனக்கூறியவர் யார்?

அ) ஔவையார்

ஆ) தொல்காப்பியர்

இ) கம்பர்

ஈ) இளங்கோவடிகள்

விடை :  ஆ ) தொல்காப்பியர் 

5. தனித்து உண்ணாமை என்பது

அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல்

ஆ) உணவளிக்கும் முறை

இ) விருந்தினரைச் சிறப்பிக்கும் செயல்

ஈ) விருந்தினரை வரவேற்றல்

விடை : அ ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படைச் செயல்.

6. Classical Literature என்பது

அ) வட்டார இலக்கியம்

ஆ) நாட்டுப்புற இலக்கியம்

இ) செவ்விலக்கியம்

ஈ) பண்டைய இலக்கியம்

விடை : இ ) செவ்விலக்கியம் 

7. செப்பல் என்பதன் பொருள்

அ) வருதல்

ஆ) அழுதுதல்

இ) சிந்துதல்

ஈ) உரைத்தல்

விடை : ஈ ) உரைத்தல்

8. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் 

அ) குறுந்தொகை

ஆ) திருமுருகாற்றுப்படை

இ) மலைபடுகடாம்

ஈ) நற்றிணை

விடை : இ ) மலைபடுகடாம்

9. நும் இல் போல நில்லாது புக்கு -இவ்வடியில் இல் என்பதன் பொருள் யாது?

அ) இலவம்     ஆ) இலை

இ) இல்லம்       ஈ) இல்லை

விடை : இ ) இல்லம் 

10. பெயரெச்சத் தொடரை தேர்தெடுக்க

அ) கேட்டவர் பாடல்       ஆ)கேட்டபாடல்

இ) கேட்டுப் பாடினார்   ஈ) கேட்டார் பாடினார்

விடை : ஆ ) கேட்ட பாடல்

                           பகுதி -  ஆ

II. குறுவினா

11. குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் பண்பு குறித்து நற்றிணை குறிப்பிடுவது யாது?

         விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு . இதை , 

" அல்லில் ஆயினும் விருந்து வரின் 
  உவக்கும் " 

    -  என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

12. பெரியபுராணம் வழியே புலப்படுத்தப்படும் விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் கூறுக.

            இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை. எனவே , அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து , பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.


13. அதிவீரராம பாண்டியர் - குறிப்பு வரைக.

         *  முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.

          * தமிழ்ப்புலவராகவும் திகழ்ந்தார்.

          *  சீவலமாறன்  என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.

          * காசிக்காண்டம் , வெற்றி வேற்கை , நைடதம் , லிங்கபுராணம் , வாயுசம்கிதை , திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம் ஆகிய நூல்கள் இவர் இயற்றியவை.

14. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?

               ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே , பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

15. வினையெச்சத் தொடரை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.

                 முற்றுப் பெறாத வினை , வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.

    பாடி மகிழ்ந்தனர் - ' பாடி '  என்னும் எச்சவினை  ' மகிழ்ந்தனர் ' என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.


                           பகுதி-இ

III. சிறுவினா

16. விருந்தோம்பல் குறித்து காசிக்காண்டம் கூறும் ஒன்பது நல்லொழுக்கங்களை விவரிக்க.

         
> விருந்தினரைக் காணின் வியத்தல்

> இனிமையாகப் பேசுதல்

> முகமலர்ச்சியுடன் நோக்குதல்

> வருக வருக என வரவேற்றல்

> அவர் எதிரில் நிற்றல்

> மனம் மகிழும்படி பேசுதல்

> அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்

> விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை தொடர்ந்து செல்லுதல்

> அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்.

ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் பற்றிக் காசிக்காண்டம் உணர்த்தும் செய்திகளாகும். -



17. பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும் செய்திகளை விளக்குக.


 * பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்;
இரவில்   சேர்ந்து  தங்குங்கள் 

* எரியும் நெருப்பைப் போல  ஒளிரும்
பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு
அணிந்துகொள்ளுங்கள்.

* சிவந்த பூக்கள்கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்

* அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும்
கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில்
சிற்றூரை அடையுங்கள்.

* அங்குள்ளவர்களிடம், பகைவரைப் 
பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும்
மானமும் வெற்றியும் உடைய நன்னனின்
கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.

*  அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள்
போவது போலவே அவர்களுடைய
வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்.

* உறவினர் போலவே அவர்கள் உங்களுடன்
பழகுவர். 

* நீண்ட வழியைக் கடந்து வந்த
உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக்
கூறுவர். 

* அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்."

*************     *************    ************

வாழ்த்துகளுடன்

மு.மகேந்திர பாபு  , தமிழாசிரியர் , 

இளமனூர் , மதுரை.

****************   ***************   ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************




Post a Comment

0 Comments