மேல்நிலை இரண்டாமாண்டு
பொதுத்தமிழ்
ஒப்படைப்பு - 2 , இயல் - 2 வினாத்தாள்
( செய்யுள் - பிறகொருநாள் கோடை
இலக்கணம் - நால்வகைப்பொருத்தங்கள் )
பகுதி - அ
I ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 ) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ ) சூரியக் கதிர்கள்
ஆ ) மழை மேகங்கள்
இ ) மழைத்துளிகள்
ஈ ) நீர்நிலைகள்
2 ) அய்யப்ப மாதவனின் கவிதைக் குறும்படம்
அ ) அறம் ஆ ) இன்று
இ ) அன்று ஈ ) பிறகொருநாள்
3 ) கைஏந்தி - இலக்கணக்குறிப்புத் தருக.
அ ) இரண்டாம் வேற்றுமை
ஆ) விளி வேற்றுமை
இ ) எழுவாய் வேற்றுமை
ஈ ) நான்காம் வேற்றுமை
4 ) ' உறிஞ்சுகிறது ' என்பதில் பகுதி -----
அ ) உறிஞ் ஆ ) உறிஞ்சு
இ ) உறி ஈ) உறிஞ்சி
5 ) ' வருமென்று ' - புணர்ச்சி விதி -----
அ ) இ , ஈ , ஐ வழி யவ்வும்
ஆ ) இனமிகல்
இ ) ஈறுபோதல்
ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே
6 ) மொழியின் அடிபபடைப் பண்புகள் -----
அ ) திணை , பால் ஆ ) எண் , இடம்
இ ) திணை , பால் , எண் , இடம்
ஈ ) இடம் , திணை
7 ) உலக மொழிகள் அனைத்திலும் ------ சொற்களே மிகுதி.
அ ) பெயர் ஆ ) வினை
இ ) இடை ஈ ) உரி
8 ) ' அவர்கள் வந்தார்கள் ' - என்ற தொடரில் ' அவர்கள் ' என்பது ------
அ ) வினைச்சொல்
ஆ ) இடைச்சொல்
இ ) பதிலிடு பெயர்ச்சொல்
ஈ ) தன்மைப்பன்மைச்சொல்
9 ) இடப்பாகுபாடு ------ வகைப்படும்
அ ) 5 ஆ ) 3 இ ) 8 ஈ ) 4
10 ) தமிழில் திணைப்பாகுபாடு ------- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ ) பொருட்குறிப்பு
ஆ ) சொற்குறிப்பு
இ ) தொடர்க்குறிப்பு
ஈ ) எழுத்துக்குறிப்பு
பகுதி - ஆ
II ) குறுவினா
1 ) நகரம் பட்டை தீட்டிய வைரமாகிறது - விளக்குக.
2 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக - குவித்து
3 ) புணர்ச்சி விதி தருக.
சுவரெங்குமிருந்த
4 ) நால்வகைப் பொருத்தங்கள் யாவை ?
5 ) இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள் எழுவாயாக அமையும்போது வினைமுடிபு எவ்வாறு அமையும் ?
பகுதி - இ
III ) சிறுவினா
1 ) மழைக்கனவிலிருந்து ஊர் எவ்வாறு விடுபடுகிறது ?
2 ) ' நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் ' - இக்கவிதை அடிகள்
' தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ! - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவது பற்றி எழுதுக.
3 ) இடப்பாகுபாடு , தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைச் சான்றுடன் விவரி.
4 ) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
i ) தலை , தளை , தழை
ii ) அலை , அளை , அழை
5 ) ' மழை ' என்னும் தலைப்பில் எட்டு வரிகளுக்குக் குறையாமல் கவிதை எழுதுக.
பகுதி - ஈ
IV ) நெடுவினா
1 ) புயலின் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக்கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.
2 ) இலக்கிய நயம் பாராட்டுக.
வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா !
- பாரதியார்.
************** ************ *************
வினா உருவாக்கம்.
திருமதி.இரா. மனோன்மணி ,
முதுகலைத்தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,
திண்டுக்கல்.
**************** ************ ***********
0 Comments