12 - தமிழ் - ஒப்படைப்பு 2 - இயல் 2 - வினாத்தாள் - குறைக்கப்பட்ட பாடப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வினாத்தாள் / 12th TAMIL - ASSIGNMENT 2 - EYAL 2 - REDUCED SYLLABUS - QUESTION

 

       மேல்நிலை இரண்டாமாண்டு 

                      பொதுத்தமிழ் 

ஒப்படைப்பு - 2 , இயல் - 2  வினாத்தாள்

( செய்யுள் - பிறகொருநாள் கோடை 

இலக்கணம் - நால்வகைப்பொருத்தங்கள் ) 


                        பகுதி - அ 

I ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 ) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது 

அ ) சூரியக் கதிர்கள் 

ஆ ) மழை மேகங்கள்

இ ) மழைத்துளிகள் 

ஈ ) நீர்நிலைகள்


2 ) அய்யப்ப மாதவனின் கவிதைக் குறும்படம்

அ ) அறம்     ஆ ) இன்று

இ ) அன்று     ஈ ) பிறகொருநாள் 


3 ) கைஏந்தி - இலக்கணக்குறிப்புத் தருக.

அ ) இரண்டாம் வேற்றுமை

ஆ) விளி வேற்றுமை

இ ) எழுவாய் வேற்றுமை

ஈ ) நான்காம் வேற்றுமை


4 )  ' உறிஞ்சுகிறது ' என்பதில் பகுதி -----

அ ) உறிஞ்    ஆ ) உறிஞ்சு

இ ) உறி         ஈ) உறிஞ்சி


5 )  ' வருமென்று ' - புணர்ச்சி விதி -----

அ ) இ , ஈ , ஐ வழி யவ்வும்

ஆ ) இனமிகல்

இ ) ஈறுபோதல்

ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே


6 ) மொழியின் அடிபபடைப் பண்புகள் -----

அ ) திணை , பால்      ஆ ) எண் , இடம் 

இ ) திணை , பால் , எண் , இடம் 

ஈ ) இடம் , திணை


7 ) உலக மொழிகள் அனைத்திலும் ------ சொற்களே மிகுதி.

அ ) பெயர்      ஆ ) வினை 

இ ) இடை        ஈ ) உரி 


8 ) ' அவர்கள் வந்தார்கள் ' - என்ற தொடரில் ' அவர்கள் ' என்பது ------

அ ) வினைச்சொல் 

ஆ ) இடைச்சொல் 

இ ) பதிலிடு பெயர்ச்சொல்

ஈ ) தன்மைப்பன்மைச்சொல்


9 ) இடப்பாகுபாடு ------ வகைப்படும்

அ ) 5     ஆ ) 3     இ ) 8    ஈ  ) 4


10 ) தமிழில் திணைப்பாகுபாடு ------- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ ) பொருட்குறிப்பு 

ஆ ) சொற்குறிப்பு 

இ ) தொடர்க்குறிப்பு

ஈ ) எழுத்துக்குறிப்பு 


                      பகுதி - ஆ 

II ) குறுவினா 

1 )  நகரம் பட்டை தீட்டிய வைரமாகிறது - விளக்குக.

2 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக - குவித்து

3 ) புணர்ச்சி விதி தருக.

சுவரெங்குமிருந்த

4 ) நால்வகைப் பொருத்தங்கள் யாவை ?

5 ) இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள் எழுவாயாக அமையும்போது வினைமுடிபு எவ்வாறு அமையும் ?


                              பகுதி - இ 

III ) சிறுவினா

1 ) மழைக்கனவிலிருந்து ஊர் எவ்வாறு விடுபடுகிறது ?

2 ) ' நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

      உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள் ' - இக்கவிதை அடிகள்

 ' தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ! - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவது பற்றி எழுதுக.

3 ) இடப்பாகுபாடு , தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைச் சான்றுடன் விவரி.

4 ) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

i )   தலை , தளை , தழை 

ii ) அலை , அளை , அழை 

5 ) ' மழை ' என்னும் தலைப்பில் எட்டு வரிகளுக்குக் குறையாமல் கவிதை எழுதுக.


                            பகுதி - ஈ 

IV ) நெடுவினா

1 ) புயலின் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு  அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக்கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.

2 ) இலக்கிய நயம் பாராட்டுக.

வெட்டியடிக்குது மின்னல் - கடல் 

     வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

கொட்டி யிடிக்குது மேகம் - கூ 

     கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று 

     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடிய - மழை 

     எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா ! 

                                     -  பாரதியார்.

**************    ************   *************

வினா உருவாக்கம்.

திருமதி.இரா. மனோன்மணி

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , 

திண்டுக்கல்.

****************    ************    ***********

Post a Comment

0 Comments