பத்தாம் வகுப்பு
தமிழ் - ஒப்படைப்பு - 2
இயல் 2 - வினா & விடைகள்
( பள்ளிக் கல்வித்துறை வழங்கிய முன்னுரிமைப் பாடத்திட்டத்தின் ( 2021 - 22 ) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு வினாக்களும் விடைகளும் . )
பகுதி-1
I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.'பாட்டுக்கொரு புலவன்' எனப் பாராட்டப்படுபவர்
அ.பாரதிதாசன்
ஆ.பாரதியார்
இ.வாணிதாசன்
ஈ.தேசிக விநாயகம்.
விடை : ஆ ) பாரதியார்
2.யாப்பைத் தவிர்த்து உரைநடையும் கவிதையும் இணைந்த வடிவம்
அ.மரபுக்கவிதை
ஆ.சந்தக்கவிதை
இ.வசனகவிதை
ஈ.எதுவுமில்லை
விடை : இ ) வசன கவிதை
3:'புதுக்கவிதையின் முன்னோடி' எனப்படுபவர் யார்?
அ.பாரதியார்
ஆ.ந.பிச்சமூர்த்தி
இ.வைரமுத்து
ஈ.மு.மேத்தா
விடை : அ ) பாரதியார்
4.பொருத்தமற்றதைத் தெர்ந்தெடு.
அ.பாஞ்சாலி சபதம்
ஆ.பாண்டியன் பரிசு
இ.பாப்பா பாட்டு
ஈ.குயில் பாட்டு
விடை : ஆ ) பாண்டியன் பரிசு
5.'மயல்' என்பதன் பொருள்.
அ.பறவை
ஆ.மயக்கம்
இ.உயிர்வளி
ஈ.காற்று
விடை : ஆ ) மயக்கம்
6."உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"
-இவ்வரிகளில் அமைந்துள்ள நயங்கள்
அ.உருவகம், எதுகை
ஆ.மோனை,எதுகை
இ.முரண், இயைபு
ஈ.உவமை,எதுகை
விடை : ஆ ) மோனை , எதுகை
7.தொகைநிலைத்தொடர் எத்தனை
வகைப்படும்?
அ.நான்கு ஆ.ஆறு
இ.மூன்று ஈ.ஐந்து
விடை : ஆ ) ஆறு
8.'மதுரை சென்றார்' என்பது எவ்வகைத்
தொகைநிலைத்தொடர்?
அ.வினைத்தொகை ஆ.பண்புத்தொகை
இ.வேற்றுமைத்தொகை ஈ.உம்மைத்தொகை
விடை : இ ) வேற்றுமைத்தொகை
9.இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ.மார்கழித்திங்கள் ஆ.சாரைப்பாம்பு
இ.வெண்டைக்காய் ஈ.மோர்க்குழம்பு
விடை : ஈ ) மோர்க்குழம்பு
10.உவமைத்தொகை பயின்று
வந்துள்ள தொடர்
அ.அன்புச்செல்வன்
ஆ. செங்காந்தள்
இ.மல்லிகைப்பூ
ஈ.தங்கமீன்கள்
விடை : ஈ ) தங்க மீன்கள்
பகுதி - 2
சுருக்கமாக விடை தருக
11.பாரதியார் இயற்றிய நூல்களில்
நான்கு கூறுக.
*குயில் பாட்டு
* கண்ணன் பாட்டு
* பாப்பா பாட்டு
* புதிய ஆத்திசூடி
12.வசன கவிதை - குறிப்பு வரைக.
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.
வசன கவிதை தமிழில் பாரதியாரால் அறிமுகப் படுத்தப்பட்டது.
13.காற்று மாசுபடுவதைத் தடுக்க
ஏதேனும் இரண்டு வழிகளைக் கூறுக.
* மரங்கள் அதிக அளவில் நட்டுவைத்துப் பராமரிக்க வேண்டும்.
* மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
14.கீழ்க்காணும் தொகைநிலைத்
தொடர்களை விரித்து எழுதுக
அ.தமிழ்த்தொண்டு - தமிழுக்குச் செய்யும் தொண்டு
ஆ.முத்துப்பல் - முத்துப்போன்ற பல்
15.வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
ஆடுமாடு மேய்த்தல் முல்லைநில
மக்களின் தொழிலாகும்.
ஆடுமாடு - உம்மைத்தொகை
முல்லைநில - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
பகுதி-3
16.தொகைநிலைத் தொடர்களை
எடுத்துக்காட்டுடன் எழுதுக.
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
1 ) வேற்றுமைத்தொகை
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும்.
எ.கா . மதுரை சென்றார்.
இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது.
2 ) வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும் , பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க , வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத்தொகை எனப்படும்.
எ.கா. வீசுதென்றல் , கொல்களிறு
3 ) பண்புத்தொகை
நிறம் , வடிவம் , சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் ' மை ' என்னும் பண்பு விகுதியும் , ஆகிய , ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
எ.கா .
செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்.
4 ) உவமைத்தொகை
உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் ) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா
மலர்க்கை - மலர் போன்ற கை
5 ) உம்மைத்தொகை
இரு சொற்களுக்கு இடையிலும் , இறுதியிலும் ' உம் ' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும்.
எ.கா. அண்ணன் தம்பி
6 ) அன்மொழி்த்தொகை
வேற்றுமை , வினை , பண்பு , உவமை , உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகையாகும் .
எ.கா . சிவப்புச் சட்டை பேசினார்.
17.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

*************** **************** ***********
வினா உருவாக்கம்
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் ,
அ.மே.நி.பள்ளி , சருகுவலையப்பட்டி ,
மதுரை .
************** ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments