பத்தாம் வகுப்பு
தமிழ் - ஒப்படைப்பு - 2
இயல் 2 - வினாத்தாள்
( பள்ளிக் கல்வித்துறை வழங்கிய முன்னுரிமைப் பாடத்திட்டத்தின் ( 2021 - 22 ) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு வினாக்கள். )
பகுதி-1
I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.'பாட்டுக்கொரு புலவன்' எனப் பாராட்டப்படுபவர்
அ.பாரதிதாசன்
ஆ.பாரதியார்
இ.வாணிதாசன்
ஈ.தேசிக விநாயகம்.
2.யாப்பைத் தவிர்த்து உரைநடையும் கவிதையும் இணைந்த வடிவம்
அ.மரபுக்கவிதை
ஆ.சந்தக்கவிதை
இ.வசனகவிதை
ஈ.எதுவுமில்லை
3:'புதுக்கவிதையின் முன்னோடி' எனப்படுபவர் யார்?
அ.பாரதியார்
ஆ.ந.பிச்சமூர்த்தி
இ.வைரமுத்து
ஈ.மு.மேத்தா
4.பொருத்தமற்றதைத் தெர்ந்தெடு.
அ.பாஞ்சாலி சபதம்
ஆ.பாண்டியன் பரிசு
இ.பாப்பா பாட்டு
ஈ.குயில் பாட்டு
5.'மயல்' என்பதன் பொருள்.
அ.பறவை
ஆ.மயக்கம்
இ.உயிர்வளி
ஈ.காற்று
6."உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"
-இவ்வரிகளில் அமைந்துள்ள நயங்கள்
அ.உருவகம், எதுகை
ஆ.மோனை,எதுகை
இ.முரண், இயைபு
ஈ.உவமை,எதுகை
7.தொகைநிலைத்தொடர் எத்தனை
வகைப்படும்?
அ.நான்கு ஆ.ஆறு
இ.மூன்று ஈ.ஐந்து
8.'மதுரை சென்றார்' என்பது எவ்வகைத்
தொகைநிலைத்தொடர்?
அ.வினைத்தொகை ஆ.பண்புத்தொகை
இ.வேற்றுமைத்தொகை ஈ.உம்மைத்தொகை
9.இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ.மார்கழித்திங்கள் ஆ.சாரைப்பாம்பு
இ.வெண்டைக்காய் ஈ.மோர்க்குழம்பு
10.உவமைத்தொகை பயின்று
வந்துள்ள தொடர்
அ.அன்புச்செல்வன்
ஆ. செங்காந்தள்
இ.மல்லிகைப்பூ
ஈ.தங்கமீன்கள்
பகுதி - 2
சுருக்கமாக விடை தருக
11.பாரதியார் இயற்றிய நூல்களில்
நான்கு கூறுக.
12.வசனகவிதை-குறிப்பு வரைக.
13.காற்று மாசுபடுவதைத் தடுக்க
ஏதேனும் இரண்டு வழிகளைக் கூறுக.
14.கீழ்க்காணும் தொகைநிலைத்
தொடர்களை விரித்து எழுதுக
அ.தமிழ்த்தொண்டு
ஆ.முத்துப்பல்
15.வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
ஆடுமாடு மேய்த்தல் முல்லைநில
மக்களின் தொழிலாகும்.
பகுதி-3
16.தொகைநிலைத்தொடர்களை
எடுத்துக்காட்டுடன் எழுதுக.
17.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
*************** **************** ***********
வினா உருவாக்கம்
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் ,
அ.மே.நி.பள்ளி , சருகுவலையப்பட்டி ,
மதுரை .
************** ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
Thanks miss
ReplyDelete