10 - சமூக அறிவியல் - வரலாறு - அலகு 1 - ஒப்படைப்பு விடைகள் / 10 SOCIAL SCIENCE - UNIT 1 - ASSIGNMENT - HISTORY - QUESTION & ANSWER

 

        ஒப்படைப்பு   -  விடைகள்

                    வகுப்பு: 10

          பாடம்: சமூக அறிவியல்

                          வரலாறு

                          அலகு -1 

முதல் உலகப்போரின் வெடிப்பும் 

அதன் பின்விளைவுகளும்,

                      பகுதி - அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1. எந்த ஆண்டு ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாகப் போரை மேற்கொண்டது?

அ) 1870 பொ.ஆ     ஆ) 1894 பொ.ஆ.

 இ) 1881 பொ. ஆ.        ஈ) 1890 பொ. ஆ

விடை : ஆ ) 1894

2. இரண்டாம் பால்கன் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது ?

அ) இலண்டன் உடன்படிக்கை

ஆ) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை

இ) பிரெஸ்ட் -லிடோவஸ்க் உடன்படிக்கை

ஈ) புகாரெஸ்ட் உடன்படிக்கை

விடை : ஈ ) புகாரெஸ்ட் உடன்படிக்கை

3. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

அ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்

ஆ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா

இ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி

ஈ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

விடை  : அ ) ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, உதுமானியர்

4. 19ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை  வாய்ந்த நாடு எது ?

அ) சீனா               ஆ ) ஜப்பான் 

இ) கொரியா        ஈ) மங்கோலியா

விடை :  ஆ ) ஜப்பான்

5. 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ' எனக் கூறியவர் யார் ?

அ) லெனின்         ஆ) மார்க்ஸ் 

இ) சன்யாட் சென்        F) மா சேதுங்

விடை : அ ) லெனின்

                         பகுதி - ஆ

III. சிறுவினா:-

1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

* இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூன்றும் மூவர் கூட்டு நாடுகள்.

* இவைகள் நட்புறவு நாடுகள் அல்லது நேச நாடுகள் எனப்படுகின்றன.

2. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் யாவை?

* இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று - Jingoism

* பிரான்சின் அதிதீவிர நாட்டுப்பற்று - Chauvinism

* ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று - Kultur

3. பதுங்குக்குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்தது என்ன?

* பதுங்கு குழிகள் உயிர் பிழைக்கப் போர் வீரர்களால் தோண்டப்படுவது.

* எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நிற்க உதவின.

* முதல் உலகப் போரின் போது பதுங்கு குழிகள் அதிகம் பயன்பட்டன.

                           பகுதி - இ

III. குறுவினா

1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதிக்க.

(i) ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிரணி சேர்க்கைகளும் :

* மூவர் உடன்படிக்கை - ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலி.


* மூவர் கூட்டு நாடுகள் - இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா

 வன்முறை சார்ந்த தேசியம் 

* ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவை ஏற்பட்டது.

* இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதி தீவிர நாட்டுப்பற்று,
ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று.

(III) ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு :

* ஜெர்மனி பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை.

* ஜெர்மனியே உலகத்தின் தலைவன் என்றார். கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது.

(iv) பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை !
* 1871 இல் அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழந்தது.

* மொராக்கோ விவகாரத்தில் பிரான்சுக்கு எதிராக ஜெர்மனி தலையிட்டது.

(v) பால்கன் போர்கள் :

* முதல் பால்கன் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டு அதன் பேரரசுசுருங்கியது.

* இரண்டாவது பால்கன் போரில் பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது.

(vi) உடனடிக் காரணம் :

* பிரான்ஸ் பெர்டினாண்டு ஆஸ்திரியா - ஹங்கேரி பேரரசரின் வாரிசு ஆவார்.

* பெர்டினாண்டு செராஜிவோ நகரில் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.

2. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்க.

1. கிரேட் பிரிட்டன் 2. பிரான்ஸ் 3.ஜெர்மனி 4.இத்தாலி 5.மொராக்கோ.

IV ) பெருவினா

1. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளை கோடிட்டுக் காட்டுக.

* ஜெர்மனி போர் இழப்பீட்டுத் தொகையாக 6600 மில்லியன் பவுண்டு தரவேண்டும்.

* ஜெர்மன் படையானது 1,000,000 வீரர்கள் மட்டுமே என்ற அளவில் சுருக்கப்பட்டது.

* நீர்முழ்கிக் கப்பல்களையும் போர் விமானங்களையும் வைத்துக் கொள்ளக்
கூடாது.ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்பட்டது.

* ஜெர்மனி தனது கடல் கடந்த காலனிகள் மீதான உரிமையை விட்டுக் கொடுத்தல்,
அலசேஸ் - லொரைன் பகுதிகளை ஜெர்மனி பிரான்சுக்குத் திருப்பித் தரவேண்டும்.

* ரஷ்யா மற்றும் பல்கேரியா உடனான உடன்படிக்கையை ஜெர்மனி திரும்பப் பெறுதல்.

* ரைன்லாந்து நேச நாடுகளின் பிடியில் படை நீக்கம் செய்யப்பட்ட பகுதியாக இருக்கும்.

***************    ************     *************

விடைத் தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை ,

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி .

இளமனூர் , மதுரை.

*************   ****************   ************


Post a Comment

1 Comments