தமிழின் தவப்புதல்வருக்கு கவிதாஞ்சலி
முதுமுனைவர். ஐயா.இரா.இளங்குமரனார்
காலமானார் ( 26 - 07 - 2021 )
**************** ************ ************
நெல்லை தந்த முல்லையே - தமிழ்ச்
சொல்லைக் காத்த கிள்ளையே..!
தமிழே ! கடலே !
படரும் சுடரே !
ஆசிரியப் பாதையில் இலக்கியப்
பயணம் கண்ட மொழி ஞாயிறின் முத்தே !
இயற்கையை இன்பமாக்க கனிச்சுவை தந்த
தேனருவியே...!
பைந்தமிழைப் பயிற்றுவித்த தமிழே!
வள்ளுவனுக்கோர் தவச்சாலை...!
பாவாணருக்கோ நூலகம் ..!
தந்து மகிழ்ந்தது உமதுள்ளம்...!
இப்போது உமைப் பிரிந்து
தத்தளிக்கிறதே தமிழர் இல்லம் !
எந்நாளும் திருநாளாய்..
தமிழ் வளர்ப்பே சிந்தனையாய்..
திருக்குறளின் மேன்மை போற்றி
திருமணச் சடங்கையும்
தமிழாக்கி அகமகிழ்ந்த
தவமைந்தரே !
தமிழாய்ந்த இளங்கதிரே...!
எங்கே அஸ்தமனம் ஆனீரோ...!
சதிராடும் உமது தமிழ்
சாகாவரம் பெற்ற சரித்திரம் அன்றோ..!
மீளாத் துயர் தந்த
மேன்மைத் தமிழே - எம்மை
ஆள இனியாரோ..!
உலகப் பெருந்தமிழே !
உமது பாதச் சுவடுகளில்
தமிழுலகம் பயணிக்கும்..! - என்றும்
உமது பணியை வணங்கும் ..!
செந்தமிழே ! இனி
தமிழன்னை திருவடியில் இளைப்பாறி அமைதி கொள்க..!
ஆழ்ந்த வருத்தங்களுடன் - பைந்தமிழ் குழு
🙏🙏😭😭🙏🙏
தமிழ்வழித் திருமணம் நடத்தி , உரைநிகழ்த்திய இளங்குமரனார் ஐயா அவர்கள்.
0 Comments