ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 37
பேனா ( ஊற்றுகோல் ) வரையலாம் வாங்க !
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************ ************ *************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று நாம் வரையும் ஓவியம் நம் விரலோடு எப்போதும் உறவாடும் ஒன்று ஆம். வாள் முனையை விட பேனா முனை வலிமையானது என்று சொல்வார்கள் அல்லவா ? அத்தகைய வலிமை மிக்க பேனாவைத்தான் இன்று வரைய உள்ளோம்.
அந்தக் காலத்தில இறகினால் மையைத் தொட்டு எழுதினார்கள். காலம் செல்லச் செல்ல அறிவியல் பல வழிகளில் முன்னேற்றம் கண்டது. பேனாக்களுள் மையை நிரப்பி எழுதும் வகையில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக ஹீரோ பேனாவைத் தன் சட்டைப்பையில் வைத்திருப்பதைப் பெருமையாக நினைத்த காலம் முன்பு இருந்தது.
தற்போது பல வண்ணங்களில் நம் எண்ணத்தை ஈர்க்கும் வகையில் பேனாக்கள் உருவாக்கப்படுகின்றன. மிக வசதியானவர்கள் தங்கத்தால் ஆன பேனாவைப் பயன்படுத்துகிறார்கள். பேனா பிடித்து எழுதும் விதமே அலாதியானது. சிலரின் கையெழுத்துகள் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும். சிலர் கையெழுத்து வாசிக்க முடியாமல் கண்ணீர் விடச்செய்யும்.
பேனா ( ஊற்றுகோல் ) எப்படி வரையறதுனு இப்பப் பார்க்கலாமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
இதோ என் சட்டைப் பையை அலங்கரிக்கும் பேனா
**************** ************** **********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments