12 ஆம் வகுப்பு - தமிழ் - அலகுத்தேர்வு - ஜூலை 2021 - மதிப்பெண்கள் 50 / காலம் 90 நிமிடங்கள் / 12 TAMIL - UNIT TEST - JULY 2021

 


பன்னிரண்டாம் வகுப்பு 

பொதுத்தமிழ் - அலகுத்தேர்வு 

மதிப்பெண்கள் : 50     

நேரம் : 1:30 நிமிடங்கள்




*****************     ************    *********

I ) பலவுள் தெரிக                       5 × 1 = 5 


1) நுந்தை தந்தைக்கு இவன் தந்தை "  என்று பாடும் நூல் -----

அ) நற்றிணை

ஆபுறநானூறு

இ) அறநானூறு

(ஈ) கலித்தொகை

2 ) தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்கு முதன்மை ஆதரமாக விளங்குவது எது?

ஆ) சங்க இலக்கியம்

ஆ) புறநானூறு

இ ) காப்பியம்

ஈ) இதிகாசம்

3 ) பல்+ துளி என்பது எவ்வாறு புணரும் ?

அ) பஃறுளி 

ஆ ) பல்துளி

 இ ) பல்றுளி 

ஈ ) பலதுளி

4 ) பிழையான தொடரைக் கண்டறிக.

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

ஆ காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

இ ) நெற்பயிர்கள் மழை நீரில் முழ்கின

5 ) ஓங்கலிடை எனத் தொடங்கும் தண்டியின்

பாடலுக்குரிய பா வகை ----------

ஆ ) இன்னிசை வெண்பா

ஆ) நேரிசை வெண்பா

இ) ஆசிரியப்பா

ஈ ) வஞ்சிப்பா

II ) எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக:-                                                  (5x2 =10)

6 ) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

7 )  நடை அழகியல் பற்றித் தொல்காப்பியத்தின் கருத்தைக் குறிப்பிடுக.

8 ) கலைச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக .

அ) Biography 

ஆ) Bibliography

9 ) ஏதேனும் ஒன்றனுக்குப்  பகுபத உறுப்பிலக்கணம் தருக:-

அ) சாய்ப்பான்

ஆ ) வந்து 

10 ) ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.

அ )  செந்தமிழே

ஆ ) ஆங்கவற்றுள்

11 ) பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக.

அ) களம்    

ஆ ) கலம் 

III )  எவையேனும் ஐந்தனுக்கு விடைதருக:- 

                                                           ( 5 × 3 = 15 ) 

12 ) நடையியல் குறித்து விளக்கம் தருக

13 ) ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் சுட்டிப் பொருள்  தருக?


14  ) தமிழாக்கம் தருக

i ) Learning is a treasure that will follow its
owner everywhere

(ii ) If you want people do understand you spease their language.

iii ) A new language is a new life.

( iv ). Knowledge of languages in the doorway to
wisdom.

15 ) சிற்பி பாலசுப்பிமணியம் - சிறு குறிப்பு தருக.

16 ) பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.

17 )குறிப்பில் மறைந்திருக்கம் தமிழறிஞர்களைக் கண்டு பிடிப்போம்.

அ) தமிழறிஞர் - முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.

ஆ ) தாய்மொழி - ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.

இ) சிறுகதை ஆசிரியர் - முதல் பாதி நவீனம்

ஈ ) முன்னெழுத்து அரசன் , பின்னெழுத்து தமிழ் மாதம்.       

IV )எவையேனும் நான்கு மட்டும் ( 4 x 5=20 )

18 பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப் பற்றை விவரிக்க.

19 ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எ.காட்டுடன் விளக்குக.

20 )  தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைக் தொகுத்து எழுதுக.

21 ) இலக்கிய நயம் பாராட்டுக:

முச்சங்கங் கூட்டி
            முதுபுலவர் தமைக் கூட்டி 
அச்சங்கத் துள்ளே 
            அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
            சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம் 
             அமைத்த பெருமாட்டி 

22 ) பாடலில் உள்ள மையக்கருத்தினையும் ஏதேனும்  மூன்று நயங்களையும்
எழுதுக.

22 )  அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக

 ' ஓங்கலிடை எனத்தொடங்கும் மனப்பாடப் 
பாடலை எழுதுக.

*************     ***************    **********-


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

1 Comments

  1. சிறப்பாகப் பணியாற்றி வரும் மகேந்திரன் ஐயாவுக்கு கூடு ஆய்விதழின் வாழ்த்துகள்

    ReplyDelete