தவத்திரு குன்றக்குடி அடிகளார்
(தெய்வசிகாமணி அருணாசல தேசிகர்
பிறந்தநாள் : ஜூலை 11 - சிறப்புப் பதிவு )
************** ************* ***********
அவர்தாம் அடிகளார்
நடுத்திட்டில் பிறந்த நாவுக்கு அரசர்அவர் பழுத்த தமிழ்ப்புலமை பாலித்த பண்பாளர் பல்லக்கை மறுத்துவிட்டு மனிதர்க்கு மதிப்பளித்து
பலவூர்கள் நடந்து சென்ற புலமைக் குருமணி துறவுக்கே பெருமை சேர்த்த தூண்டா மணிவிளக்கு
பட்டிதொட்டி யெங்கேயும் பட்டுமன்றப் பாங்கினை
இலக்கிய ஆய்வாக இயக்குவித்த வித்தகர்
பேச்சுக்கலை சமுதாய ஆக்கமெனப் போற்றியவர்
தெய்வசிகாமணி குன்றக்குடியின் தவமுனி
சைவம் போற்றியவர் சமத்துவ வழிகாட்டி
சாமானிய மக்களுக்கும் திருக்குறளைப் பரப்பியவர்
குன்றக்குடி என்றாலே குருமணிதான் நினைவுவரும்
என்றென்றும் தமிழ்வாழ எல்லோர்க்கும் வழி சொன்னார்
கருமைத் திரமேனி கருணைத் திவுருவம்
இருமைக் காவி உடை ஈடில்லாத் தலைப்பாகை
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *******
0 Comments