ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 7 - அழகாய் வரையலாம் ஆப்பிள்.
வழங்குபவர் : திருமதி.இலஷ்மி பிரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! இன்று நாம வரையப்போற ஓவியம் ஆப்பிள். ஆப்பிள் நாம விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று.
பழம் சாப்பிட்டா நீங்க பலம் பெறுவீர்கள். ஆமா குழந்தைகளா ! பாலித்தீன் பையில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்களைத் தவிர்த்து , ஆரோக்கியம் தரக்கூடிய பழங்களை நாம் உண்ண வேண்டும்.
இன்று நான் பழக்கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்ப நண்பர் ஒருவர் வந்தார். என்ன சார். பழம் வாங்குற மாதிரி தெரியுதே ன்னார்.
ஆமாங்க ! என்றேன்.அ
வீட்ல யாருக்கும் உடம்புக்கு முடியலயானு கேட்டார். இல்லையே என்றேன அப்றம் ஏன் பழம் வாங்குறிங்க னு கேட்டார்.
குழந்தைகளே ! நம்மில் பலர் மனநிலை எப்படினா, உடம்புக்கு முடியலன்னாதான் பழம் சாப்பிடனும் ங்கு குறிக்கோள்ள இருக்காங்க. தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் நமது உடல் வலுப்பெரும்.
ஆப்பிள் பழம் எப்படி அழகா வரையலாம்னு பாப்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
என்ன குழந்தைகளா ? எவ்ளோ அழகா இருக்கு. அப்படியே சாப்பிடலாம் போல தோணுதா ? படத்தை வரைந்துவிட்டு , அம்மாவிடம் சொல்லி ஒருஆப்பிள் சாப்பிடுங்கள்.
நாளை மற்றுமோர் அழகிய ஓவியத்தில் சந்திப்போம்.
வண்ணம் : திருமதி.இலஷ்மி பிரதிபா , ஓவியஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
*********************** *******************
0 Comments