வகுப்பு 9 சமூக அறிவியல் - பயிற்சித்தாள் 1 - மனிதப்பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

வகுப்பு 9 - சமூக அறிவியல்அலகு 1 

பயிற்சித்தாள் எண்-1

மனிதப்பரிணாம வளர்ச்சியும் சமூகமும்:

வரலாற்றுக்கு முந்தைய காலம்




1. சரியான விடையைத் தேர்வுசெய்க.

1. மனிதனால் உருவாக்கப் பெற்ற அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோஅல்லது கருவியோஎன்று அழைக்கப்படுகிறது..

அ) புதைபடிமங்கள் ஆ) தொல்லியல்

இ ) செய்பொருள் ஈ) தொல்லியல்திரடு

2. தொல்பொருள்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விளக்கமளிக்கும் இயல்.

அ) புவியியல்   ஆ) நிலவியல்

இ) தொல்லியல் ஈ) புள்ளியியல்

II.படத்துடன் பொருத்துக

3.

அ) செம்புகாலம்

ஆ) இரும்புகாலம்

இ) கருப்பு மற்றும் சிவப்பு மண்பாண்டங்கள்

ஈ) அகழாய்வு

உ) கல்வட்டங்கள்

(அ) 1) இ2)அ 3)ஆ 4)உ5)ஈ

(ஆ) 1)8 2)அ 3)ஆ 4)உ 5)ஈ

(இ)1)இ2)அ 3)ஆ 4)உ 5)ஈ

(ஈ)1)8 2)அ 3)ஆ 4)உ 5)ஈ

III. கீழ்கண்டதில் தவறான இணை எது?

4.  அ) பழங்கற்காலம் -   கைக்கோடாரி, வெட்டுக்கத்தி

ஆ) இடைகற்காலம்     -  சுரண்டும் கருவி

இ) லாஸ்காஓவியம்    -  பிரிட்டன்

ஈ) பல்லாவரம்                -   கைக்கோடாரிகள்

உ) ஆதிச்சநல்லூர் -  இரும்புக்காலம்

IV. கூற்று காரணம் கண்டறிக.

5. A கூற்று : நடுகற்கள் மென்ஹிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் வீரம் மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் ஆதாரங்களாக உள்ளன.

B காரணம்

கற்கள் நிலத்தில் நட்டுவைக்கப்பட்டுள்ளதால் நடுகற்கள் என்று அழைக்கபடுகின்றன.

அ) A மற்றும் B இரண்டும்சரி. A க்கு சரியான விளக்கம்.

(ஆ) A மற்றும் B இரண்டும் சரி. A க்கு B சரியான விளக்கம் அல்ல.

இ) A மற்றும் B இரண்டும் தவறு

ஈ) A மற்றும் தவறு A க்கு B சரியான விளக்கம் அல்ல.

உ) A மற்றும் B சரி. A க்கு B சரியான விளக்கம் அல்ல.


V. சரியா? தவறா? கண்டுபிடியுங்கள்:

6. ஆதிச்சநல்லூர் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது.  ( சரி )


7. பத்திக்கல், குடைக்கல்  அல்லது தொப்பிக்கல்  ஆகியவை கேரளாவில்காணப்படுகின்றன. ( சரி )


8. இரும்பு காலத்தில் மண்பாண்டங்களுக்கு கருப்பு சிவப்பு வர்ணங்கள் அடிக்கப்பட்டன.  ( சரி )

9. பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை ஏன் மண்தாழிகளில் புதைத்தனர்? 

அ) இறப்பிற்கு பிறகு மீண்டும் வருவார்கள் என புதைத்தனர்.
ஆ) மறுபிறவியின் மீது நம்பிக்கை இருந்தது. 

இ) வயது முதிர்ந்த கவனிக்க முடியாமல் இறக்கும் தருவாயில் உள்ளவர்களையும்தாழிகளில் புதைத்தனர்.

ஈ) விவசாயத்திற்கு பயன்படாத பறம்பு பகுதிகளில் புதைத்தனர்.

உ ) இவை அனைத்தும் சரி.


VI. ஓரே வரியில் விடையளி

10. கேள்வி: பெருங்கற்காலம் இரும்புக் காலம் என்று ஏன் அழைக்கப்பட்டது?

மக்கள் இறந்தவர்கணப் புதைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்
படுத்தியதால், இரும்புக் காலம் பெருங்கற்காகம் என  அழைக்கப்பட்டது


11. கேள்வி: நுண்கற்களின் அளவு என்ன?

சுமார் 5 செ.மீ

12. தமிழகத்தில் அதிகமாக காணப்படும் தொல்லியல்களங்கள் எந்தகாலத்தைச் சார்ந்தது.? 

தொல் பழங்காலத்தைச்   சார்ந்தது. 

13. தமிழகத்தில் தற்பொழுது அகழாய்வு நடைபெறும் இடங்கள் யாவை?

1 ) கீழடி   2) மணலூர்    3) கொந்தகை   4) அகரம்

5) கொடுமணல்   6) ஆதிச்ச நல்லூர்


வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே !

 வீட்டில் இருந்தே நமது பாடங்களை படித்து மகிழ்வோம்.

 மு. மகேந்திர பாபு ,  தமிழ் ஆசிரியர்,  மதுரை  - 97861 41410

Post a Comment

0 Comments