வசவு

 வசவு 


இன்று 

எப்படியேனும் 

தன மன பாரத்தை 

இறக்கி வைத்து ,

நாக்கப் புடுங்குற மாதிரி 

நாலு கேள்வி  கேட்க வேண்டும் -

நாராயணசாமியின்  நினைப்பு இது .


வருஷம் ஒரு தடவ 

கெடா வெட்டுறேன் ,

அப்பப்ப  பொங்கல் வைக்கிறேன் ,

முடி காணிக்க கொடுக்கிறேன் ,

தினமும் விளக்கு வைக்கிறேன் .


இப்படி 

எத்தனை எத்தனை 

உனக்காகச் செஞ்சாலும் ,

என் கஷ்டம் நஷ்டம் தீரலையே !


என் கூப்பாடு 

உன் செவியில விழலையா ?

இந்த வருசமும் மழை பெய்யாம 

கரிசக்காடு 

விரிசல் விழுந்து கிடக்கே !

எப்படி பிள்ளைகளை கரை சேர்ப்பேன்  ?

என்று உரக்க கத்தினான் .


எல்லாவற்றையும் கேட்டு 

அமைதியாய் இருந்தார்

அய்யனார் சாமி 

அந்த மழை பெய்யா 

வானத்தைப் போல !

Post a Comment

0 Comments