அடிகுழாய்

 அடி குழாய் 


அடி குழாயின்

அடியில் அமிழ்ந்து கிடக்கின்றன 

பெண்களின்  ஆயிரமாயிரம் 

கனவுகளும் ,கவலைகளும் ,

சில சந்தோசங்களும் .


அவை யாருமற்ற 

நள்ளிரவு நேரத்தில் 

நடமாடத் தொடங்கி ,

தங்களுக்குள் விவாதித்து ,

அதி காலையில் 

மூர்ச்சித்து விழுகின்றன 

பெண்களின் கவலை சொல்லி .


பெண்களின் கண்ணீர்த் துளியாய் 

அடிகுழாயில் 

ஒழுகிறது தண்ணீர்த் துளி .


ஒவ்வொரு 

காலிக் குடங்களிலும்

தண்ணீரோடு 

நிரப்பப் படுகின்றன 

பெண்களின் கவலை களும் .

Post a Comment

0 Comments