கொலுசு.

யாருமற்ற அறையினில்
நீயும் நானும்
எதிரெதிர்.
உன்
பஞ்சுப் பாதத்தை
நெஞ்சில் வைத்து
மீசையால்
ஆசையோடு
வருடுகிறேன்.
சிணுங்கலுடன்
காலை உள்ளிழுக்கிறாய் .
வெட்கத்தில்
சிவக்கின்றன
கன்னமும்
கண்களும்.
கொலுசுக்கும்
உள்ளங்காலுக்கும்
ஒரு முத்தம்
சத்தமின்றி தர ,
கண்களை மூடி
நாணுகிறாய்.
தோற்றுப்போய்
நிறம் மாறுகிறது மருதாணி.

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments