11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழியை ஆள்வோம் - சான்றோர் சித்திரம் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

 

                      வகுப்பு - 11 , தமிழ்

       இயல் 1 - மொழியை ஆள்வோம் 

               சான்றோர் சித்திரம்




*************    ****************   ***********

சான்றோர் சித்திரம்

          தமிழ் இலக்கிய வரலாற்றில், 'புலமைக் கதிரவன்' எனத் தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

                    மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார். அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றை பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் முதலானோர் இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.


1 ) தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் - இத்தொடரில்
‘புலமைக் கதிரவன்' என்பதற்கு இலக்கணக்குறிப்புத் தருக.

புலமைக் கதிரவன் - உருவகத்தொடர்

2 ) மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.

புலமைக் கதிரவன்  - உருவகத்தொடர்

(தேனுண்ணும் வண்டு போல் - உவமைத்தொடர்

3 ) மீனாட்சி சுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் - விடைக்கேற்ற வினாவை அமைக்க.

தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் யார்?

4 ) பத்தியில் மொழிமுதல் எழுத்துக்களைக் கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.

i ) புராணங்கள்
ii  ) மகா வித்துவான்
(iii) யமக அந்தாதி
(iv) திரிபந்ததாதி
{v) கலம்பகம்.

5 ) விளங்கினார் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

விளங்கினார் = விளங்கு + இன் + ஆர்
விளங்கு - பகுதி
இன் - இறந்தகால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

*************    ***************    *************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********


Post a Comment

0 Comments