வகுப்பு - 11 , தமிழ்
இயல் 1 - நம்மை அளப்போம் - பகுதி - 2
சிறுவினா - புத்தகம் , பக்கம் எண் - 22
**************** ************** **********
சிறுவினா
1 ) சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
தமிழ்மொழிப் பற்றி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாட வேண்டும். காலத்தால் அழியாத பழமை வாய்ந்த கனிமங்களின் உரமெல்லாம் சேரப் பாடத்தான் வேண்டும்.
2 ) நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?
i ) முகவுரை என்பது நூலுக்கு முன் சொல்லப்படுவது.
ii ) முகவுரையில் நூலின் இயல்பு. ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர் பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு, நூலின் பெயர், தொகைவகை, விரி என்பவனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர்(மாணவர்), நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.
iii ) இந்த எட்டுச் செய்திகளும் நூல் ஒன்றின் முகவுரையில் இடம் பெற வேண்டும் என நன்னூல் குறிப்பிடுகிறது.
3 ) என்னுயிர் தமிழ்மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.
i ) என் தாய் மொழி தமிழில் பிறமொழி சொற்கள் கலவாமல் நான் பேசுவதோடு மட்டுமல்லாமல், என் உறவினர், நண்பர்களையும் தூய தமிழில் பேச முயற்சி மேற்கொள்வேன்.
ii ) வீறுநடை கொண்டு உலகம் முழுவதும் என் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றுவேன்.
iii ) நான் எங்கு இருந்தாலும் என் தாய்மொழி தமிழுக்கு முதல் இடம் தருவேன். தாய்மொழியை வளப்படுத்துவேன். பல உயர்ந்த தமிழ் இலக்கியங்களைப் படைத்த தமிழ் அறிஞர்களைப் பெருமைப்படுத்த என்னால் இயன்றதைச் செய்வேன்.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments