சுளுக்கு

 சுளுக்கு    


@      ஊரெல்லாம் 

         நண்பர்களோடு  ஓடி  ஆடி ,

         கட்டச் சுவத்திலும் ,

         கண்மாய்க்  கரையிலும்  குதித்து ,

         நுங்கு  வண்டி  ஓட்டி,

         கருக்குப்  பனை  ஏறி விழுந்து,

         கபடி  விளையாடி ,

         கால்  சுளுக்காகி  ,

         நொண்டி .....நொண்டி .....

         நண்பர்களோடு  கைத் தாங்களாகி....


@     சுளுக்குப்  பாட்டி

        கருப்பாயி  வீட்டிற்குச் சென்று ....

        விளக்கெண்ணை  தடவி .....

        சுளுக்கான  நரம்பை 

        சொடக்கெடுப்பதைப்போல

        எடுப்பாள்  கதைகள்  பல பேசி ...

        மிகப் பொறுப்பாய்

        கட்டணமில்லா  மருத்துவராய் ....


@    இப்போதெல்லாம்  

        கால் சுளுக்கு  என்றால் 

        கருப்பாயிப்  பாட்டி  ஞாபகம்தான் .


@    பால்ய  நினைவுகளோடு 

       பாட்டி  வேட்டிற்குச்  சென்றேன் .

       மண்ணாகி விட்டது  பாட்டியின்  வீடு 

       மண்ணுக்குள்  போய்விட்ட 

       பாட்டியைபோல .!


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments